இந்தியாவின் முதல் பட்ஜெட்: 1860 ஏப்ரல் 7 அன்று இந்தியாவில் முதல் முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த அரசியல் வாதியும் பொருளாதார நிபுணரு மான ஜேம்ஸ் வில்ஸன் பிரிட்டிஷ் அரசிடம் அந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் 1947 நவம்பர் 26 அன்று தாக்கல் செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்ற, தமிழரான ஆர் கே சண்முகம் செட்டி அந்தப் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நீண்ட பட்ஜெட் உரை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 பிப்ரவரி 1 அன்று, 2020-21-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, அந்த பட்ஜெட் உரை 2 மணி நேரமும் 42 நிமிடங்கள் வரை நீண்டது. 2019 ஜூலை மாதம் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த அவரது முதல் பட்ஜெட் உரை 2 மணி 17 நிமிடங்களும் நீண்டது.
No comments:
Post a Comment