மகாத்மா அய்யன்காளி
நூறு ஆண்டுகளுக்கு முன், கேரளத்தை மூடப்பழக்கங்களும், சமூகக் கொடுமைகளும் தீண்டாமை இருளும் சூழ்ந்திருந்தன.
1892இல் திருவனந்தபுரம் வந்த சுவாமி விவேகானந்தர், கேரளத்தை மனநோய் பிடித்தவர்களின் புகலிடம் எனவும், பைத்தியங்களின் குடியிருப்பு எனவும் சாடினார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கேரளத்தின் பகுதிகள் தீண்டாமை, சாதிக் கொடுமைகளால் நிறைந்திருந்தன. இந்த அநீதிகளைத் தாங்க முடியாது அடித்தள மக்கள் மதமாற்றத்தைப் புகலிடமாகக் கொண்டனர்.
இத்தகைய கொடுமைகளுக்கு இடையே சமூக மறுமலர்ச்சி இயக்கங்கள் கேரளத்தில் தோன்றின. நாராயண குரு போன்ற மகான்கள் சமயத்தின் வழியாகச் சமூக விடுதலையைத் தேடியபோது, உரிமைப் போராட்டத்தின் வழியாகச் சமூக விடுதலைக்கான முயற்சிகளை முன்னெடுத்தவர் அய்யன்காளி. கேரளத்தின் புகழ்மிக்க சமூகப் போராளியான அய்யன்காளி நவீன கேரளத்தின் முதன்மையான சிற்பிகளில் ஒருவர்.
No comments:
Post a Comment